ஜெனிவாவில் இம்முறை இந்தியாவும் எமக்கு ஆதரவளிக்கும் - தினேஷ் குணவர்தன


ஜெனிவாவில் இம்முறை இந்தியாவும் தங்களுக்கு ஆதரவளிக்கும் என நம்பிக்கைகொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக பல நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் எதிர்வரும் 22ஆந் திகதி வாக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரித்தானியா, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மறைக்கப்பட்ட வகையில், அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் உள்ளக விடயங்கள் தொடர்பில், குற்றம்சாட்டுவது அல்லது வாக்களிப்பது, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் பொறுப்பான செயற்பாடு அல்ல.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது நாட்டுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பல ஆண்டுகளாக சுமத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தாங்கள் கவனமாக இருந்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

தங்களது அரசாங்கத்தின் தேர்தலுக்குப் பின்னர், மனித உரிமைகள் சார்ந்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்காக, பாதீட்டுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போதைய அரசாங்கம் இதுபோன்ற பல சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகையில், தங்களுக்கு எதிராக பல்வேறு வழிகளில் குற்றங்களை சுமத்தி, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில், அதனை மீண்டும் மீண்டும் புறக்கணிப்பது நியாயமில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுக்களை தோற்கடிப்பதற்கு தாங்கள் முயற்சிக்கின்றதாகவும், பல நட்பு நாடுகள் இதற்காக தங்களுடன் கைகோர்த்து வருகின்றதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த முறை, இந்தியாவும் தங்களுக்கு ஆதரவளிக்கும் என நம்பிக்கைக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK