(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பகுதியில் 25 மூடைகளில் சுமார் 943 கிலோ மஞ்சளை சட்டவிரோதமாக எடுத்து செல்லும் போது கற்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றியதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்
இது பற்றி தெரியவருவதாவது இந்தியாவில் இருந்து அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 25 மூடைகளில் 943 கிலோ மஞ்சளை துரையடி பகுதியில் இருந்து டிமோ பட்டா வாகனத்தின் வாயிலாக வேறு இடத்திற்கு கொண்டு செல்வதாக கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபில்யூ.பீ எதிரிசிங்கவின் வழிகாட்டலுக்கு அமைய பீ.எஸ் 55118, 41191, பீ.எஸ்.டி 80413 ஆகிய இலக்கங்களை உடைய மூவர் அடங்கிய குழுவினரால் இன்று (12) மேற்கொள்ளப்பட சுற்றிவலைப்பில் கைப்பற்றப்பட்டதுடன் வாகான சாரதியையும் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கைப்பற்றப்பட்ட மஞ்சள் வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK