தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கோட்டை பொலிஸ் நிலையம் இன்று காலை 9 மணி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கிருமிதொற்று நீக்கப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

வேறு நிலையங்களில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்ட மீண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.