சிஸ்டம் சேன்ஞ்யை செய்து காட்டியவர் சஜித் பிரேமதாச என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். திங்கள்கிழமை காலை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கு கொண்ட கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இன்று எல்லாரும் கேட்கும் விடயம் சிஸ்டம் சேன்ஞ்.இவர்கள் மேடைகளில்,போராட்ட்ங்களில் சிஸ்டம் சேன்ஞ் பற்றி பேசினாலும் தேர்தல் என்ற ஒன்று வரும் போது அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
ஜனாதிபதி வேட்பாளர்களிலே சிஸ்டம் சேன்ஞ்யை செய்து காட்டியவர் சஜித் பிரேமதாச மட்டுமே.நாம் வரலாற்றில் பல எதிர்கட்சி தலைவர்களை கண்டுள்ளோம்.அவர்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தை விமர்ச்சிக்கவும் அரசாங்கத்தை கவிழ்க்க என்ன செய்யலாம் என யோசித்ததேயே நாம் கண்டுள்ளோம்.
ஆனால் வரலாற்றில் முதன்முறையாக அந்த சிஸ்ட்டத்தை மாற்றியவர் எமது தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே .
கொவிட் பிரச்சினையாக இருந்தாலும் சரி பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும் சரி அவர் விமர்சன அரசியலை விட்டுவிட்டு சேவை அரசியலை முன்னெடுத்தார்.அந்த சிஸ்ட்டத்தை மாற்றினார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK