பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட மருந்துகள் 2 மாதமாக துறைமுகத்தில் தேக்கம்!


பேராதனை போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 29 லட்சம் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் 2 மாதத்துக்கு அதிக காலமாக விடுவிக்கப்படாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


குறித்த மருந்து தொகையை விரைவில் பெற்றுத் தருமாறு கோரி பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எம்.எஸ்.வீரபண்டார, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

உடைந்த எலும்பு பாகங்களை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் உள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள செல்வந்தர் ஒருவரினால் வழங்கப்பட்ட இந்த மருந்துகள், கடந்த ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK