விமல் வீரவங்ச தனது வரலாறு முழுவதும் தான் இருக்கும் அணிக்குள் சிக்கல்களையே உருவாக்கி வந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலத்தில், அன்றைய நிதியமைச்சின் செயலாளரும், தற்போதைய ஜனாதிபதியின் செயலாளருமான பீ.பி. ஜெயசுந்தரவை பொருளாதார கொலையாளி எனக் கூறி சிக்கலை உருவாக்கினார். நிதியமைச்சின் செயலாளரை பொருளாதார கொலையாளி எனக் கூறி அவருடன் சிக்கலை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது கட்சிகளுக்கு இடையில் மோதலை உருவாக்க முயற்சித்து வருகின்றார். தற்போதைய அரசாங்கத்திற்கு எவரும் உரிமையாளர்கள் இல்லை. இது நாங்கள் இணைந்து உருவாக்கிய அரசாங்கம். இதனால், தாமே இந்த அரசாங்கத்தின் உரிமையாளர்கள் என எவரும் நினைப்பார்களாயின் அவர்களுக்கு தவறியுள்ளது.
விகாரையின் புண்ணியதானத்திற்கு கவிதை கூற எவரையாவது கூலிக்கு அமர்த்தினால், கட்டணம் செலுத்தி அவர் அனுப்பி வைக்கப்படுவாரே அன்றி, விகாரையை அவருக்கு எழுதி கொடுப்பதில்லை என்பதை விமல் வீரவங்ச புரிந்துகொள்ள வேண்டும் எனவும் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK