அரசிலிருந்து வெளியேறுகிறாரா விமல் ? அவரது இல்லத்தில் அவசர கூட்டம்


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமைத்துவம் தொடர்பில் கருத்து வெளியிட்டு சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அரசை விட்டு வெளியேற தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

சற்றுமுன் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் 12 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற விமல் வீரவன்சவின் வீட்டிற்கு செல்லும் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் உதய கம்மன்பில, நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கே இன்று கட்சித் தலைவர்கள் கூடியுள்ளதாகவும் இந்த அரசு ஆட்சிக்கு வர விமலின் பங்களிப்பு இருந்ததை செய்நன்றி உடைய எவரும் மறந்துவிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.

 Sive Ramasami

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK