பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்


பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பும் போதும், அவர்கள் பாடசாலைகளில் இருந்து கற்றல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும், பாடசாலைகளில் இருந்து வெளியேறும் போதும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது கட்டாயமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் தரம் 2 முதல் தரம் 13 வரையான வகுப்புகளுக்காக எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன.

சுகாதார துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைய, ஜனவரி மாதம் 25ஆம் திகதி முதல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த மேல் மாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளில் 11ஆம் தரத்தின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பும் போதும், அவர்கள் பாடசாலைகளில் இருந்து கற்றல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும், பாடசாலைகளில் இருந்து வெளியேறும் போதும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது கட்டாயமாகும்.

இதற்கான பொறுப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அதிபர்களுக்கும் இருக்கிறது என அறிவுறுத்தியுள்ளார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK