கொரோனா விடயத்தில் கொழும்பு பாதுகாப்பானது என கருதவேண்டாம்! ரோசி சேனாநாயக்க


கொரோனா தொற்று விடயத்தில் கொழும்பு தற்போது பாதுகாப்பானது என்று கருதவேண்டாம் என்று கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர அதிகார எல்லைக்குள் மொத்தம் 12,255 கொரோனா நோயாளிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதில் கொழும்பு மாநகரசபையின் 292 ஊழியர்களும் அடங்குகின்றனர். நேற்று மாத்திரம் 950 பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டன.

அதில் இருபத்தைந்து பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டனர். மேலும் 600 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. எனவே கொழும்பு இப்போது பாதுகாப்பானது என்று ஒருபோதும் கருத வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸூக்கு முன்னர் இருந்ததைப் போன்று சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் என்று நினைக்க வேண்டாம். இருப்பினும், கொரோனா வைரஸூடன் வாழ முடியும் என்றும் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK