மதுஷின் சடலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டியுள்ளார்


திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் பல்வேறு போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

போதைப் பொருள் மீட்பு நடவடிக்கையின் போது, மதுஷ் இன்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மதுஷின் பிரேதப் பரிசோதனை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரேதப் பரிசோதனையின் பின்னர் மதுஷின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மதுஷின் மனைவி அவரது சடலத்தை அடையாளம் கண்டு கொண்டதாக கொழும்பு நீதவான் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK