20ஆவது திருத்தம் – இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று


அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இன்றைய இரண்டாம் நாள் விவாதத்தைத் தொடர்ந்து குறித்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இன்று காலை 10 மணி முதல் இரவு 7.30 வரை நாடாளுமன்ற விவாதம் நடைபெறவுள்ள நிலையில்,  மதிய போசனத்துக்காக விவாதம் இடைநிறுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று இரவு 7.30 இற்கு விவாதம் முடிவடைந்ததும் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பும், குழு நிலை விவாதமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான நேற்றைய முதலாம் நாள் விவாதத்தின்போது ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினர் தமது கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK