க்ளப் வசந்த கொலை : சந்தேக நபரின் வாக்குமூலத்தை ஊடகங்களுக்கு வழங்கியமை குறித்து கேள்வி


கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் 7 சந்தேக நபர்களுக்கு எதிராக கடுவெல நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (10) அறிக்கை தாக்கல் செய்தனர்.

சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளுக்காக விசாரிக்க அனுமதி வழங்குமாறு அத்துருகிரிய பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட முதல் சந்தேக நபரான துலான் சஞ்சுல என்பவரின் வாக்குமூலத்தினை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், ஊடகவியலாளர்களை வரவழைத்து பகிரங்க வாக்குமூலம் பெற்று வாக்குமூலத்தை பொது ஊடகங்களில் பிரசாரம் செய்ததாக சந்தேக நபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்ற அவதானத்திற்கு கொண்டுவந்தார்.

குற்றவியல் நீதித்துறையில் சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெறுவதற்கான வழி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகவும், சட்டச் சூழலைப் புறக்கணித்து உரிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தன்னிச்சையாகச் செயற்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்தனர்.

சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த நீதவான், பொலிஸ் விசாரணைகள் நீதியான முறையில் சட்டத்தரணி மற்றும் தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரின் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.

அங்கு சந்தேகநபர்களை மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பொலிஸாரிடம் நீதவான் வினவியதுடன், அதற்கான நியாயமான காரணங்கள் ஏதுமில்லை என்ற அடிப்படையில், தடுப்புக்காவலின் பின்னர் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் என கைது செய்யப்பட்டுள்ள துலான் சஞ்சுல என்ற சந்தேக நபரும் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க சந்தர்ப்பம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்