ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று(07) ஆரம்பமாகிய நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை முன்வைத்தார்.
ஜனாதிபதி சபையில் உரையாற்றும் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு சபையை விட்டு வெளியேறியதுடன், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை.
ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, பாட்டளி சம்பிக்க ரணவக்க, இஷாக் ரஹ்மான் மற்றும் குமார வெல்கம ஆகியோரோடு பைசல் காசிம், எச்.எம்.எம் ஹரீஸ் ஆகியோர சபையில் இருந்தனர்.
மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் அரசுக்கு எதிராக இருந்தாலும் அந்த கட்சியில் அங்கத்துவம் பெற்று நாடாளுமன்றம் வந்த உறுப்பினர்களோ அரசுக்கு ஆதரவாக தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். இதனால் இவ்விரு பெரும் கட்சிகளின் ஆதரவாளர்கள் நிலைகுலைந்துள்ளனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK