கண்டி தேசிய வைத்தியசாலையின் தொண்டை, காது, மூக்கு சத்திரசிகிச்சை பிரிவு பெண் வைத்தியர்கள் உடை மாற்றும் அறையில் நவீன கையடக்க தொலைபேசியை மறைத்து வைத்து நுட்பமான முறையில் காணொளி பதிவு செய்ததாக கண்டி தலைமையக பொலி
ஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சுகாதார உதவியாளர் தொண்டை, காது, மூக்கு அறுவை சிகிச்சை பிரிவில் பணிபுரிபவர் என்றும், கடந்த 12ம் திகதி குறித்த இடத்தில் உடை மாற்றிக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் மிகவும் நுட்பமாக வைக்கப்பட்டிருந்த குறித்த கைப்பேசியை கண்டுபிடித்துள்ள நிலையில் பின்னர் ஏனைய வைத்தியர்களுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில் ஏனைய வைத்தியர்கள் கண்டி தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்து கைப்பேசியை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த கைப்பேசி காணொளிகளை ஆய்வு செய்ததில், இந்த கைப்பேசியை பயன்படுத்தி நீண்ட காலமாக வைத்தியர்கள் உடை மாற்றுவதை குறித்த நபர் காணொளி பதிவு செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
விசாரணையின் பின்னர், கைப்பேசியை வைத்திருந்த சுகாதாரப் பணியாளரை கைது செய்து கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தலைமையக பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸ் தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் பணிப்புரையின் பேரில் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தேவிந்தி விக்கிரமசிங்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK