நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக அமையுமென கவலை தெரிவிப்பு



பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கவலை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் (SLC) க்கு இடைக்கால குழுவை நியமிப்பது மற்றும் நீதிபதி ஒருவரின் நடத்தை தொடர்பான வழக்கு தொடர்பாக அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் குற்றச்சாட்டுகளால் கவலையடைவதாக BASL அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகள் மற்றும் நீதிபதிகள் தொடர்பான அறிக்கைகள், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மறைப்பதாகக் கூறப்படுவது, நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகக் கருதப்படுவதாக BASL மேலும் கூறியது.

பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை வைத்துக் கொண்டு நீதிபதி ஒருவரின் நடத்தைக்கு எதிராகக் கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு, குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை விசாரிக்க சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற நபர்களை நியமிக்க வேண்டும் என்று BASL கருதுகிறது.

இலங்கை கிரிக்கெட்டுக்காக நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்கால குழுவின் மீதான வர்த்தமானியை இடைநிறுத்தி நேற்று முன் தினம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீதித்துறை மீது கடுமையான தாக்குதலை தொடுத்ததை அடுத்து BASL அறிக்கை வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை வழங்கிய விளையாட்டுத்துறை அமைச்சர், இந்தத் தீர்ப்பு ஒரு கருத்தை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தியதோடு, நீதித்துறைக்கு எதிராக பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.