சுகாதாரப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்


நாளை (03) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

சுகாதார சேவைகள் தொடர்பான பிரச்சினைகளை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதைத் தடைசெய்து சுகாதார செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருந்தன.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுகாதார செயலாளர் இன்று (02) கலந்துரையாடல் ஒன்றை வழங்கியதன் காரணமாகவே பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்ததாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

மேலும், தொழிற்சங்கங்களை நசுக்குவதற்கு தாம் செயற்படப்போவதில்லை என்றும், சுகாதாரச் செயலர் சுகாதார சேவையின் நல்வாழ்வுக்காக கருத்து வெளியிடுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK