வவுனியா சிறைச்சாலையில் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி


வவுனியா சிறைச்சாலையில் தட்டம்மை தடுப்பூசி பெறாத அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைக்குள் அம்மை நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் நான்கு கைதிகளுக்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து ஜூலை 25 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

கைதிகள் உறவினர்களை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கைதிகளை சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் கைதிகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK