மாவனல்லையில் முன்மாதிரி கௌரவிப்பு நிகழ்வு

மாவனல்லை ஹிங்குளோயா மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாயலில் சுமார் 35 வருடங்கள் நிர்வாக சபையில் சேவையாற்றி பள்ளிவாயலிக்கும் ஊருக்கும் பல சேவைகளைச் செய்த டாக்கடர் .ஹமீட்  ஏ அஸீஸ் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (02) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாயிலில் நடைபெற்றது.

இவரோடு அல்ஹாஜ் முபாரக் மற்றும் சபுமல் நிறுவனத்தின் உரிமையாளர், அல்ஹாஜ் கமால்தீன் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் கடந்த பல வருடங்களாக நிர்வாக சபையில் பணியாற்றியர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று அதே தினத்தில் இஷாத் தொழுகையின் பின்னர் மாவனல்லை ராழியா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகள் பள்ளிவாயலின் தந்போதைய நிர்வாக சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக வருகை தந்திருந்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட்.ஏ.எம். பயைசல் அங்கு உரையாற்றும் போது,

பிரச்சினைகளும் போட்டிகளும் காணப்படும் சூழ்நிலையில் பதவியில் இருந்த ஒரு பள்ளிவாயல் நிர்வாக சபையை கௌரவிப்பது முன்னுதாரணமான செயற்பாடாகும் என தெரிவித்த அவர்,

தான் பணிப்பாளராக பதவி ஏற்ற காலம் தொட்டு இன்று வரையிலான காலப்பகுதியில் இப்படியான நிகழ்வொன்று நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார்.

ராஷிட் மல்ஹர்டீன்







BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK