எம். எச். அப்துர் ரஷீத் அவர்கள் எழுதிய திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும் என்ற நூல் வெளியீடு விழா எதிர்வரும் 04 ஆம் திகதி சனிக்கிழமை அனுராதபுரம் CTC வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் Rajarata EDU Network ஊடாக கடந்த வருடம் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதை, கவிதைப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.
இந்நூல் குடும்ப வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் பொறுப்புகள் என்பவற்றுக்கான பல்வேறு நடைமுறைச் சாத்தியமான சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் இஸ்லாமிய நோக்கிலும் நவீன உளவியல், சமூகவியல் கோட்பாடுகளின் பின்புலத்திலும் முன்வைத்துள்ளதோடு, அவற்றை எமது வாழ்வில் கட்டங்கட்டமாக அமுலாக்கம் செய்வதற்கான பயிற்சித் திட்டத்தையும் வழங்கியுள்ளமை விஷேட அம்சமாகும்
வட மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அபிவிருத்திப் பிரிவுகக்குப் பொறுப்பான மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ. அப்துஸ் ஸமத் (நளீமி, SLEAS-1) அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற அதிபரும் எழுத்தாளருமான கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.
0 Comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK