ஜே.வி.பி மற்றும் தூய ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் அதாஉல்லா எம்.பியின் தலைமையிலான குதிரையில் இணைவு !


நூருல் ஹுதா உமர் 


கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தூய ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக கல்முனை மாநகர சபை தேர்தலில் களமிறங்கிய கமால் முகம்மட் அஸ்கர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் இப்றாகீம் குமாயூன் ஆகியோர் தேசிய காங்கிரசின் கொள்கைகளை ஏற்று அக்கட்சியில் இணைந்து கொண்டனர்.

தேசிய காங்கிரஸின் கல்முனை அமைப்பாளர் இப்திகர் ரிஷாத் சரீப்  முன்னிலையில் தேசிய காங்கிரஸ் மருதமுனை பிரதானியும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சமட் ஹமீடின் அழைப்பின் பேரில் அவர்கள் இருவரும் தேசிய காங்கிரசில் இணைந்து கொண்டனர்.

தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சமூகம் சார் முன்னெடுப்புக்கள், அரசியல் கொள்கைகள், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் திருப்தி கண்டமையே இவர்கள் தேசிய காங்கிரசில் இணைந்து கொள்ள காரணம். இந்த இணைவு நிகழ்வில் தேசிய காங்கிரசின் மருதமுனை மத்தியகுழு மற்றும் இளைஞர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK