கடன் அட்டை மோசடி: 18 வயது இளைஞர் கைது


திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களைப் பயன்படுத்தி 55 இலட்சம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில் 18 வயது இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் தம்மலசூரிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞர் 5 இலட்சம் வெளிநாட்டு கடன் அட்டை பாவனையாளர்களின் தகவல்களை சேகரித்து, 90 கடன் அட்டைகள் மூலமே 55 இலட்சம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளார்.

கணினி, கமெரா, உணவு, மதுபானம் உள்ளிட்ட பொருட்களை அந்த பணத்தின் மூலம் அவர் வாங்கியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK