எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது” - ஆணைக்குழு தலைவருடனான சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்



“எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது” - ஆணைக்குழு தலைவருடனான சந்திப்பில்  மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து!


உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை, மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கொழும்பில் (19) சந்தித்துக் கலந்துரையாடினார்.


இதன்போது, எல்லை நிர்ணயம் தொடர்பில் நாடளாவிய ரீதியில், மக்கள் காங்கிரஸ் கட்சியினால் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர், பொதுமக்களினாலும் பொது அமைப்புக்களினாலும் எல்லை நிர்ணய திருத்தம் சம்பந்தமாக, தமது கட்சிக்கு  வழங்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை, ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கையளித்தார்.


அத்துடன், கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, தேர்தல் முறையிலே குளறுபடிகள் இருந்ததினால், அந்தத் தேர்தல் முறையானது பாரிய தோல்வியை ஏற்படுத்தியது எனவும் ஆணைக் குழுவின் தலைவரிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சுட்டிக்காட்டினார். 


இனிவரும் காலங்களிலும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்கும் பட்சத்தில், சமூக ரீதியான மற்றும் இனரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் எனவும்  தெரிவித்த அவர், இதன் காரணமாக பாரிய சவால்ககளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.


எனவே, பழைய விகிதாசார முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அவ்வாறு நடத்துகின்ற பட்சத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் எதிர்பார்க்கின்ற அளவிலான குறைப்பை செய்ய முடியும் எனவும் எடுத்துரைத்தார்.


பழைய விகிதாசார தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமது கட்சியின் இறுதி நிலைப்பாடு எனவும், அதற்குரிய சிபாரிசை எல்லை நிர்ணய ஆணைக் குழு அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்,  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அனுமதிக்க வேண்டாம் எனவும் எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் தலைவரிடம்  கோரிக்கை விடுத்தார்.


இந்த சந்திப்பில்,  எல்லை நிர்ணய ஆணைக்குழுவின்  உறுப்பினர் ஹமீட் மற்றும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK