முஷரப், ரகுமான், அலி சப்ரி: மூவர் மீதும் விசாரணைகளை முன்னெடுக்க கட்சி அதிஉயர் பீடம் தீர்மானம்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் முது நபீன் , புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ஏ  ரகுமான் ஆகிய மூவரையும் நேரடியாக விசாரிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.

கட்சியின் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் மீறி  அரசாங்கத்துக்கு ஆதரவாக இவர்கள் மூவரும் செயல்படுவதற்கு எதிராக  கட்சி விளக்கம் கோரியது.

இதற்கு,அவர்கள் வழங்கிய எழுத்து மூலம் விளக்கத்தில் திருப்தி இல்லாததால், இவர்கள் மூவரையும் நேரடியாக விசாரிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது.

    இதற்கமைய, அடுத்த மாதம் நான்காம் ஐந்தாம் மற்றும் 9ஆம் திகதிகளில் ஏதாவது ஒரு தினத்தில் கட்சித் தலைமையகத்துக்கு வந்து தங்களது விசாரணைகளை

 எதிர்கொண்டு விளக்கங்களை தருமாறு  கட்சி  அதி உயர் பீடம்  தீர்மானித்திருக்கிறது.

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Previous Post Next Post