ரஞ்சனுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கோரிக்கையை எழுத்து மூலம் அனுப்புமாறு ஜனாதிபதி அறிவிப்பு


ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோரிக்கை தொடர்பான காரணத்தை அறிவித்து எழுத்துமூலமாக அந்த கோரிக்கையை முன்வைக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச இது சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன் அவர் தற்போது சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK