சமல் ராஜபக்ச என்ற முட்டாள் என்னை சண்டையிட அழைத்தார்! - சரத் பொன்சேகா


“ நான் உரையாற்றும் போது சமல் ராஜபக்ச என்ற முட்டாள் எழுந்து தன்னுடன் சண்டைக்கு வருமாறு அழைத்தார்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனக்கும், அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே பொன்சேகா இதனை கூறியுள்ளார்.

அன்றைய சபாநாயகரை விமர்சித்து, நான் மூன்று மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில, என்னை நாடாளுமன்றத்திற்கு வர அனுமதிக்கவில்லை, என்னை சிறையில் அடைத்து வைத்திருந்தனர் என கூறும் போது, சமல் ராஜபக்ச என்னை தன்னுடன் சண்டைக்கு வருமாறு அழைத்தார். நடக்க முடியாத நபருடன் சண்டையிட்டு, அவர் இறந்து போனால், அதன் பின்னர் எங்களுக்கு எதிராக கொலை வழக்கு வரும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அமைச்சர் “ வெளியில் வா. வெளியில் வா, வெளியில் வா காட்டுகிறேன்” என விடுத்த சவாலுக்கு பதிலளிக்கும் போதே பொன்சேகா இதனை கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கும் சமல் ராஜபக்சவுக்கு இடையில் நடந்த இந்த வாக்குவாதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தனது முகநூல் பக்கத்தில் நேரடியாக காணொளியை பதிவேற்றம் செய்திருந்தார்.

சரத் பொன்சேகா, அமைச்சர் சமல் ராஜபக்சவை கழுதை என கூறி திட்டியதையும் காணொளியில் காணக் கூடியதாக இருந்தது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK