நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி தெரிவிக்கின்றது.
அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் விஜயதாச ராஜபக்ச விமர்சனம் செய்த காரணத்தினால் இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
விஜயதாச ராஜபக்சவின் அரசியல் வரலாறு மற்றும் நடத்தைகளை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மை கடுந்தொனியில் இழிவயாக திட்டியதாக விஜயதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK