பொதுஜனபெரமுனவின் தலைவர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சவை விலக்கிவிட்டு கோத்தபாயவை நியமிக்கவேண்டும் - விமலின் கருத்தினால் ஆளும்கூட்டணிக்குள் குழப்பம்


பொதுஜனபெரமுனவின் தலைவராக ஜனாதிபதியை நியமிக்கவேண்டும் என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்த கருத்துகாரணமாக அரசாங்கத்திற்குள் கடும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

பொதுஜனபெரமுனவின் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவை நீக்கவேண்டும் என விமல்வீரவன்ச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக அரசாங்கத்திற்குள் கடும் கருத்துவேறுபாடு எழுந்துள்ளது .

அமைச்சர் விமல்வீரவன்ச மன்னிப்பு கோரவேண்டும் என பொதுஜனபெரமுனவின் பொதுச் செயலாளர் சாகரகாரியவசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூட்டணி குறித்து கருத்து தெரிவிப்பதற்கோ நடவடிக்கை எடுப்பதற்கோ விமல்வீரவன்சவிற்கு எந்த உரிமையும இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

விமல்வீரவன்ச தனது கருத்தினை வாபஸ்பெறவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK