ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி


(அஸீம்  கிலாப்தீன்)

ஹொரவ்பொத்தான, துட்டுவெவ பிரதேசத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தான பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். 

இந்த இராணுவ வீரர் கொழும்பு, மோதரை பகுதியிலுள்ள இராணுவ முகாமில் பணியாற்றிய பின்னர் கடந்த 9 ஆம் திகதி ஹொரவ்பொத்தான துட்டுவெவ பிரதேசத்திலுள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

அதன் பின்னர் 10 ஆம் திகதி அவரிடமிருந்து பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஹொரவ்பொத்தான பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அசெலா திசானநாயக்க தெரிவித்துள்ளார். 

மேலும் அவருடன் தொடர்பினைப் பேணியவர்களையும், அவர் சென்று வந்த இடங்களையும் விசாரித்து வருவதாகவும் ஹொரவ்பொத்தான பிராந்திய சுகாதார வைத்தியர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK