மாளிகைக்காடு மையவாடி சுவரை தொடர்ந்து சாய்ந்தமருது மையவாடி சுவரும் கடலரிப்பில் சரிந்தது.

 நூருல் ஹுதா உமர்

கடந்த சில வாரங்களாக கடலரிப்புக்கு இலக்கான மாளிகைக்காடு ஜனாஸா மையவாடியை அண்மித்த சாய்ந்தமருது 15ம், 17ம் பிரிவுகளுக்காக மையவாடியாக அடையாளப்படுத்தபட்டு அண்மையில் அமைக்கப்பட்ட ஜனாஸா மையவாதியின் சுற்று சுவரின் ஒரு பகுதி கடலரிப்பினால் உடைக்கப்பட்டு நேற்றிரவு கடலுக்குள் சரிந்தது.

அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு பகுதி தொடர்ந்தும் இவ்வாறு கடலரிப்புக்கு இலக்காகி வருவதனால் அப்பிரதேசங்களில் வாழும் மீனவர்களும், பொதுமக்களும் கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி தொடர்பில் பல முன்னெடுப்புக்கள் நடைபெறுவதாக வாய்முலமே அறிவிக்கப்பட்டு வரும் இச்சூழ்நிலையில் இந்த சுவரும் கடலரிப்பில் சரிந்து விழுந்திருப்பது அப்பிரதேச மக்களுக்கு மிகப்பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 





BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK