இலங்கையில் மேற்கொள்ளப்படும் கட்டாயத் தகனக்கொள்கை ஒரு படி மிக அதிகம்!விமர்சித்துள்ள உலக தமிழர் பேரவை


சிறுபான்மை சமூகங்களின் புறக்கணிப்பு மற்றும் ஓரங்கட்டப்படுதலின் நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் கட்டாயத் தகனக்கொள்கை ஒரு படி மிக அதிகம் என விமர்சிக்கப்பட்டுள்ளது.

உலக தமிழர் பேரவை இந்த விமர்சனத்தை வௌியிட்டிருக்கிறது.

இந்த பகுத்தறிவற்ற மற்றும் பாரபட்சமானஅரசாங்கக் கொள்கையை மாற்றியமைக்க அனைத்து சமூகங்களின் தலைவர்களும் தங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்ளவேண்டும் என்று உலக தமிழர் பேரவை கோரிக்கை விடுத்திருக்கிறது.

கொரோனா உடலங்களின் தகனம் என்ற கட்டாயக்கொள்கை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு பெரும் சீற்றத்தையும் ,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்களின் மத கொள்கையின் படி ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும்.இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

அவர்களின் அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றும் படி கட்டாயப்படுத்துவது கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது என்றும் உலக தமிழர் பேரவை தெரிவித்திருக்கிறது.

தற்போதைய சூழலில் கொரோனாவால் மரணித்த உறவினர்களின் உடலங்களை உரிமை கோரவும் முஸ்லிம் சமுகத்தினர் மறுப்பு வௌியிட்டிருக்கின்றனர்.

இது அவர்கள் தமது மத நம்பிக்கைக்கு எதிரான செயலை விரும்பாததை தௌிவாக காட்டுகிறது.உலக சுகாதார அமைப்பு கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்கள் அடக்கம் செய்வது பொது சுகாதாரத்திற்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் இலங்கையில் மாத்திரமே இந்நடவடிக்கை்கு மறுப்பு தெரிவித்து வருவதாகவும் உலக தமிழர் பேரவை தெரிவித்திருக்கிறது.

(TW)

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK