அடுலுகம பிரதேசத்தில் மேலும் 195 தொற்றாளர்கள்


பண்டாரகம அடுலுகம பிரதேசத்தில் மேலும் 195 தொற்றாளர்கள் நேற்றைய தினம் இனங்காணப்பட்டதாக பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டது.

631 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள களுத்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு சொந்தமான குடா ஹீனடியன்கல பிரதேசத்தில் இன்று பிசிஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதில் பங்கேற்றதாக சுகாதார பிரிவு தெரிவித்தது.

இதேவேளை, திருகோணமலை நகரில் 15 கொவிட் தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்ட நிலையில் அதில் 13 பேர் திருகோணமலை ஜமாலிய பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK