IDH மருத்துவமனையில் பணியாற்றி வரும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று


தேசிய தொற்று நோயியல் பிரிவுடன் தொடர்புடைய கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் கடமையாற்றிவரும் தாதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து குறித்த தாதிக்கு வைரஸ் தொற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை, முகக்கவசங்கள் மற்றும் சமூக இடைவெளி பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் நேற்றைய தினம் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் மொத்தமாக 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK