அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மீதான கொலைக் குற்றச்சாட்டு தள்ளுபடி


அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மீதான கொலைக் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டு தற்போதைய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது.

கண்டி மேல் நீதிமன்றில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சார கூட்டமொன்றுக்காக தம்புள்ள செல்லும் வழியில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்துமாறு ஜனக பண்டார தென்னக்கோன் உத்தரவிட்டார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஜனக பண்டார தென்னக்கோன் கடந்த 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கைது செய்யப்பட்டு நவம்பர் மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை ரத்து செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்பொழுது அறிவித்துள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK