(சர்ஜுன் லாபீர்)
எமது நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய சமுர்த்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சகல சமுர்த்தி வங்கிகளையும்,சமுர்த்தி மகா சங்கங்களையும் கணனி மயப்படுத்தும் செயற்திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று(6) கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் முதன்முதலாக கல்முனை பிரதேச சமுர்த்தி வங்கியானது சமுர்த்தி திணைக்களத்தின் வங்கி மென்பொருளினூடாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது சமுர்த்தி பயனுகரிகளிற்கான கணனி மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவையினை வழங்கி வருகின்றது .
கணனி மயப்படுத்தப்படும் செயற்பாட்டினை ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஆர் எம் சாலீஹ்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என் எம் ரம்சான்,கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ் நயீமா,முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ரிபாயா,சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம் நெளஸாத்,சமுர்த்தி மகா சங்க உதவி முகாமையாளர் எம்.எம் மன்சூர்,கருத்திட உதவியாளர் எம்.ஜெளபர்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK