முஹம்மட் ஹாசில்
2020 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(15) வெளியானது.
இதற்கமைய ஹொரவ்பொத்தான நிக்கவெவ முஸ்லிம் வித்தியாலயம் இம்முறை வரலாற்றில் முதல் தடவையாக அதி கூடிய மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு(158) மேல் புள்ளிகளை பெற்று வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஜனாப் A.B மஹ்ரூப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றிய 26 மாணவர்களில் 8 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு(158) மேல் புள்ளிகளை பெற்றே இவ் வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளதாக பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்துள்ளதோடு அந்த 8 மாணவர்களின் பெயர் விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.
59 வருட பாடசாலை வரலாற்றை சாதனையாள் புரட்டிப் போட்ட மாணவ சொல்வங்களை அன்றிலிருந்து முழு மூச்சுடன் இரவு பகல் பாராது வளப்படுத்திய வகுப்பாசிரியை H.M நிஷா ஆசிரியரையும் பாடசாலையின் அதிபர் ஜனாப் A.B மஹ்ரூப் அவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK