'நான் அவள் இல்லை'


கொழும்பு, தாமரை தடாகம் அருகே வாகன காட்சியறையில் மோதிய சொகுசு காரினை தான் செலுத்தவில்லை என, என விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்த யுவதி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் வெளியான புகைப்படங்களில் இருந்த, சிட்னி விக்ரமநாயக்க என்ற யுவதியே இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.

“சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தி பொய்யானது. வாகனத்தை  நான் செலுத்தவில்லை. எனது தந்தை பொலிஸ் அதிகாரி கிடையாது. எனக்கு அண்ணன் ஒருவர் கிடையாது.  எனது நண்பர்களே விபத்தை எதிர்கொண்டனர். உதவிக்காகவே நான் அங்கு சென்றேன்” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தை எதிர்கொண்டவர் எஸ்.எஸ்.பி. பிரதீப் ரத்நாயக்க என்பவரின் மகள் என்றும் இந்த படத்தில் உள்ளவர் அவரது நண்பி என்றும் சிட்னி விக்ரமநாயக்க என்ற யுவதி தனது முகப்புத்தக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

asianmirror

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK