கல்முனையில் மேலும் இரண்டு கொரோனா வைரஸ் தொற்றாளிகள் அடையாளம்


அம்பாறை மாவட்ட கல்முனையில் உள்ள இறக்காமம் பகுதியில் மேலும் இரண்டுகொரோனா வைரஸ் தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி. சுகுனன் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஒரு புத்தகக் கடையில் பணிபுரிந்து வரும் ஒருவர் அண்மையில் கொரோனா தொற்றாளியாக கண்டறியப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டபீ.சி.ஆர் சோதனைகளின் போது தொற்றாளியின் தந்தை மற்றும் சகோதரருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 22 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK