STF உட்பட 11 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா


பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட 11 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று (30) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் 400 இற்கு அதிகமான குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 52 வயதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று மாலை கொன்பரன்ஸ் ஒன்றில் கலந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரின் மரண பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவாதாகவும் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் காரணத்தை கூற முடியும் என தெரிவித்த அவர் குறித்த அதிகாரி பியகம பகுதியில் உள்ள திறமையான அதிகாரி ஒருவர் எனவும் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK