சுகாதார அமைச்சர் நாட்டு மக்களிடம் விசேட வேண்டுகோள்…!


கம்பஹா பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சில வைத்தியசாலைகளுக்கு செல்ல மறுப்பு தெரிவிப்பதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்களை வைத்தியசாலைக் அழைத்து செல்ல வேண்டிய ஏற்பாடுகள் உடன் செய்யப்படுவதுடன், அதற்காக அம்புலன்ஸ் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

ஆனாலும் தொற்றாளர்கள் சிலர் வைத்தியசாலைக்கு செல்ல மறுப்பு தெரிவிப்பதாக சுகாதார தரப்பினர் தம்மிடம் முறையிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் சுகாதார தரப்பினருக்கு உதவுவது மாத்திரமல்லாது, தொற்றாளர்கள் கூடிய ஒத்துழைப்புகளை வழங்குமாறும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK