தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்த பெண் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்


வெலிகந்த பிரதேசத்தில் உள்ள கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இராணுவ தளபதி தகவல் வெளியிட்டுள்ளார். 68 வயதான பெண்ணொருவர் நேற்றையதினம் உயிரிழந்தார். இவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழக்கவில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் யுவதியின் தாய் என தெரியவந்துள்ளது. இவர் கம்பஹா, வரபலன, உடப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர். எனினும் குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கவில்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் குறித்த பெண் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார். மகளுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டமை அடுத்து, அவரின் தாயை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்து சென்று 10 நிமிடங்களில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK