அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய எதிர்தரப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் எவ்வித வரப்பிரசாதங்களையும் வழங்கவில்லை.
ஆளும் தரப்பினருக்கு ஆதரவு வழங்கியதால் அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் எதிர் தரப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டது.
எதிர்தரப்பினரது ஆதரவு இல்லாமல் கூட 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றும் பலம் ஆளும் தரப்பினரிடமிருந்தது.
20 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட சாதகமான காரணிகளை கருத்திற் கொண்டு எதிர்தரப்பினர் ஆதரவு வழங்கினார்கள்.
ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து ஆதரவு வழங்கிய எதிர்தரப்பின் உறுப்பினர்களுக்கு அரசாங்கம் எவ்வித வரப்பிரசாதங்களையும் வழங்கவில்லை என்றார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin