மருதமுனை ஆசிரியை பாத்திமா ஸுபாவின் “சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்” கவிதை நூல் வெளியீ்டு

 (நூருள் ஹுதா உமர்)

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், ஆசிரியையுமான மருதமுனையைச் சேர்ந்த பாத்திமா ஸுபா அப்துல் றஊப் எழுதிய கவிதைகளின் தொகுப்பான “சுவாசித்துக் கொண்டிருக்கின்றேன்” நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (03) மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவரும், இலக்கிய விமர்சகருமான  ஜெஸ்மி எம். மூஸாவின் தலைமையில் 
நடைபெற்றது. 

இந்த நூல் வெளியீட்டு விழாவில்  முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

வெளியீட்டின் வரவேற்பும் அறிமுக உரையும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பொருளாளர் எச்.எம்.எம்.மன்சூர் நிகழ்த்தினார். நூல் நயத்தல் உரையை ஆசிரியர் சங்கத்தின் தலைவரும், இலக்கிய விமர்சகருமான ஆசிரியர் ஜெஸ்மி எம். மூஸா நிகழ்த்த நூலாய்வுரையை இலக்கிய விமர்சகரும் ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான எம்.அப்துல் றஸாக். நிகழ்த்தினார். 
 
பிரதேசத்தின் மூத்த இலக்கியவாதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு பிரதிகளை பெற்று கொண்டனர்.





BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK