நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று: ஒரேநாளில் ஏழாயிரத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த தொற்றாளர்களில் 496 பேர் பேலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்
பட்டுள்ளது.

ஏனையவர்களில், தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 48 பேருக்கும், காலி மீன்பிடித் துறைமுகத்தில் ஐந்து பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 20 பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்துடன் தொடர்புடைய 40 பேருக்கும் இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்து 896ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 644 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் மூவாயிரத்து 238 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK