இலங்கை இன்னும் 5வது கட்ட நிலைமைக்கு செல்லவில்லை! சுகாதார அமைச்சர்


இலங்கைக்குள் கொரோனா தொற்றாளர்கள், அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் போல சமூகத்தில் ஆங்காங்கே கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் தொற்றிய மூலத்தை கண்டறிய முடியாதபடி சமூகத்தில் அடையாளம் காணப்படுவது அந்த நோயின் 5வது கட்டம் எனவும், இலங்கை இன்னும் அந்த நிலைமைக்கு செல்லவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் சரியான முறையில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றினால், வைரஸ் பரவலை குறைக்க முடியும். அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் கண்டறியப்பட்டிருக்கவில்லை.

சுகாதார துறையினர் உரிய அவதானத்துடன் இருந்த காரணத்தினாலேயே மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் முதல் பெண் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சுகாதார துறையினர் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK