பல்கலை மாணவர்கள் 20 பேருக்கு பிசிஆர்


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 20 மாணவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள்  தற்போது தனித்தனியே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 20 பேரும் மினுவாங்கொட மற்றும் திவுலப்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் ​சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பெலிஹுல்ஓயா- பொது சுகாதார பரிசோதகர் லாலித குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ,குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய இளைஞர் ஒருவர், பலாங்கொட- ஸ்ரீ பம்பஹின்ன பிரதேசத்துக்கு விடுமுறைக்கு வந்துச்  சென்றுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK