இலங்கையில் மேலும் 201 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 140 பேர் மற்றும் பல்வேறு மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 24 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 37 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.