கிண்ணியா நகர சபை NFGG உறுப்பினர் அப்துல்லா மஃறூப் உடன் இணைவு

ஹஸ்பர் ஏ ஹலீம்

நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின்(NFGG) கிண்ணியா நகர சபை உறுப்பினராக செயற்பட்டு வந்த உமர் றழி ரனீஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அப்துல்லா மஃறூப் அவர்களுடன்  (04)உத்தியோகபூர்வமாக தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக  களமிறங்கியிருக்கும் முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் பயணத்தில் இணைந்து கொண்ட உமர் அலி  ரனீஸ்  அவர்கள் பொதுத் தேர்தலின் போது அவரின் கரங்களை பலப்படுத்தவுள்ளார்.

குறித்த நிகழ்வு பெரியாற்று முனை பகுதியில் இடம் பெற்றது இதில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்,கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான ஐயூப் நளீம் சப்ரீன் எம்.எம்.மஹ்தி, நிஸார்தீன் முஹம்மட், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸ்மி உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK