ராஜபக்ச குடும்பத்தினர் ஆறு மாதம் களவில் ஈடுபட்டிருந்தனர் - அஷாத் சாலி குற்றச்சாட்டு

இந்நாட்டிலுள்ள மக்களுக்கு நவம்பர் மாதம் முதல் ஜுன் மாதம் வரைக்கும் எதுவித உதவிகளும் கிடைக்கவில்லை. ஆனால் ராஜபக்ச குடும்பத்தினர் ஆறு மாதம் களவுகள் செய்தனர் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஷாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஓட்டமாவடியில் இன்று இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு உரம் இலவசமாக வழங்குவதாக கோட்டாபய அரசாங்கம் அறிவித்தது. மாதா மாதம் உங்கள் வீட்டுக்கு ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய் வரும் என்றார்கள்.

மக்கள் எதிர்பார்த்தனர். மக்களுக்கு நவம்பர் முதல் ஜுன் வரைக்கும் மக்களுக்கு ஆதரவாக எதுவும் நடக்கவில்லை. ஆனால் ராஜபக்ச குடும்பம் ஆறு மாதம் களவுகள் செய்தனர்.

அவர்கள் வந்த நல்ல நேரம் நாட்டில் கொரோனா வந்தது. நாட்டில் பணம் இல்லை. மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். உலகத்திலே பெற்றோல் விலை குறைந்த நிலையில் ஒரு பவுசர் இருபது ரூபாய்க்கு தரும் நிலையில் உள்ளது.

எங்களது அரசாங்கம் இருந்த காலத்தில் கூடும் போது கூடும், குறையும் போது குறையும். ஆனால் ராஜபக்ச காலத்தில் ஏறுமே தவிர இறங்க மாட்டாது.

பெற்றோல் பணத்தின் மூலம் வீட்டுக்கு ஐயாயிரம் கொடுப்பதாக சொன்னதுதான் உண்மை. அனைவரும் கிடைத்ததா என்று தெரியாது.

மகிந்தானந்த அளுத்கமகே மார்ச், ஏப்ரல், மே, ஜுன் மாதத்திற்கான மின்சார பட்டியல், தண்ணீர் பட்டியல், தொலைபேசி பட்டியல் என்பன வராது என்று கூறியிருந்தார்.

ஆனால் பட்டியல் வந்துள்ளது. இதனை ராஜபக்சவின் வீட்டுக்கு அனுப்பி விட்டால் சரி. பட்டியல் வராது என்றார்கள். ஆனால் இதனை இரண்டு மடங்காக செய்து கள்ளப்பட்டியலாக அனுப்பியுள்ளனர்.

இந்த விடயத்தினை மக்களிடம் இருந்து மறைப்பதற்கு கருணா அம்மானை கொண்டு வந்தார்கள். கொழும்பில் சரத் வீரசேகர தமிழ் விடுதலைப் புலிகளை கொலை செய்ததாக சொல்கின்றார்.

கருணா நான் மூவாயிரம் இராணுவத்தினை கொலை செய்தேன் என்று கூறுகின்றார். எப்படி மகிந்த இவ் விடயத்தை சமப்படுத்தியுள்ளார் என்று பாருங்கள்.

ஆனல் மஹிந்த சிங்கள மக்கள் பக்கம் சென்றால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை. தமிழ், முஸ்லிம் தலைமைகள் யாரும் வந்து பேரம் பேச வேண்டாம். நீங்கள் இல்லாத அரசாங்கத்தினை அமைத்துள்ளோம் என்கின்றார்.

ஆனால் எமது பகுதியில் பல்வேறு கட்சிகளினை இறங்கியுள்ளார். கல்முனையில் குதிரை, மாடு என பல சின்னங்களில் வரும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK