கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை மோசமடைந்தால் மீண்டும் அனைத்து பாடசாலை மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கி சுகாதார பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய கல்விசார் ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அதிகாரிகள் இணைத்து கல்வி அமைச்சில் தகவல் நிலையமொன்றும் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதி கல்விப் பணிப்பாளரின் தலைமையின் கீழ், இந்த நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், 1988 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பாடசாலை அதிபர்கள், கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்விச் சேவை அதிகாரிகள் தாம் சேவையாற்றும் பிரதேசங்கள் தொடர்பில் தகவல்களை வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK