பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனுக்கும்  அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த 10 நாட்களில் தமக்கு நெருக்கமாக இருந்த அனைவரையும் தயவுசெய்து தங்களை கொரோனா வைரஸ்ஸூக்கான பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரின் குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த அமிதாப் பச்சன் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், 











நான் கோவிட்19 தொற்றுக்காக  பாசிட்டிவ் சோதனை செய்பட்டுள்ளேன். வைத்திசாலைக்கு மாற்றப்பட்டேன் .. வைத்திசாலை  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறேன் .. என குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின்  முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து தங்களை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!  என தெரிவித்துள்ளார்.
அபிஷேக் பச்சன் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், 
“எனது தந்தை, நான் இருவரும் கொரோனாவுக்கான பரிசோதனை செய்தோம். லேசான அறிகுறிகளைக் கொண்ட நாங்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். தேவையான அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். எங்கள் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அனைவரையும் பீதியடையாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK